ஜெர்மனியின் நாயகியே--அம்மன் பாடல்
-----
எல்லையில்லா இன்பம் தரும் ஜெர்மனியின் நாயகியே
முல்லை மலர்ச்சிரிப்பாலே தொல்லை துயர் விலகிடடுமே.
தொல்லை துயர் விலகிடடுமே
அன்னக்கும் அன்னையாகி கண்ணுக்கு ஒளியுமாகி
முன்னை வினை தீர்த்து முப்பொழுதும் காக்கின்றாய்
என் மனதின் ஏக்கத்தை சொல்லி அழ வார்த்தையில்லை
அன்னை இதை அறியாயோ? ஆதரித்து அருள்புரிவாய்
(எல்லையில்லா இன்பம்)
நேர்த்தியாய் வாழ்விக்கும் கீர்த்தி நிறைந்தவள் நீ..
பூர்த்தி செய்வாயே உனைப்பாடும் பாடலையே
வார்த்தைகளை தேடுகின்றேன் வாழ்த்தியுனைப்பாடிடவே
வாட்டமதை போக்கி எனை வாழ்த்தி அருளாயோ.
(எல்லையில்லா இன்பம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment