Monday, January 19, 2009

விநாயகன் மலர்ப் பதம்

விநாயகன்
---------


விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.

(விநாயகன் மலர்ப் பதம்)

பண்ணிய பாபங்கள் அகலுமே-உள்ளம்
புண்ணிய பூமியாய் மாறுமே.-அதனால்
எண்ணியதெல்லாம் ஜெயமாக்கும்
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.

(விநாயகன் மலர்ப் பதம்)

மோதகப் பிரியனை தினந்தோறும்
போற்றவே யோகமே கை கூடும்.
பாதக வினையிருள் விலகுமே.
சாதனை பெரும்புகழ் மலருமே.

(விநாயகன் மலர்ப் பதம்)


கருணைக்கு அவன் ஒரு இலக்கணம்-என்
கருத்துக்கு அவன் ஒரு இலக்கியம்.
முருகனின் சோதரன் மலர்ப் பதம்
முத்திக்கு வித்தாகும் அற்புதம்.

(விநாயகன் மலர்ப் பதம்)
பக்தி கீதங்களுடன்
ராகினி

No comments:

Post a Comment